Thursday, April 8, 2010

கிளிநொச்சியில் லெ.கேணல் சந்திரன் அவர்களின் நினைவுத்தூபி, சிறுவர் பூங்கா இலங்கைப் படையினரால் அழிப்பு

கிளிநொச்சியில் உள்ள மாவீரன் லெ.கேணல் சந்திரன் அவர்களின் நினைவுத்தூபி இலங்கைப் படையினரால் அழிக்கப்பட்டு படைமுகாமாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் லெ.கேணல் சந்திரன் அவர்கள் இந்திய படையினரின் காலகட்டத்தில் தமிழ் மக்களின் அரசியல் நலனிற்காக உழைத்த இவர் பின்பு கிளிநொச்சி மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளாராக செயற்பட்டு வீரவரலாறானார்.
இவரின் நினைவாக கிளிநொச்சியின் நகர்ப்பகுதியில் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு, முன்னை நாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்செல்வன் அவர்களால் மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது.
கிளிநொச்சியினை வல்வளைத்த இலங்கைப் படையினர் தமிழ் மக்களின் வரலாற்று இடங்களை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்கள். இதன் ஒரு கட்டமாகவே லெ.கேணல் சந்திரன் பூங்கா அழிக்கப்பட்டு அங்கு இலங்கைப் படைமுகாம் அமைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சிக்கு சென்று வரும் மக்கள்

0 comments:

Post a Comment